Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எங்கள் மீது குப்பைகளைக் கொட்டாதீர்கள்… க்ளன் மேக்ஸ்வெல் ஆதங்கம்!

எங்கள் மீது குப்பைகளைக் கொட்டாதீர்கள்… க்ளன் மேக்ஸ்வெல் ஆதங்கம்!
, செவ்வாய், 12 அக்டோபர் 2021 (11:04 IST)
ஆர்சிபி அணியின் தோல்வியை அடுத்து அந்த அணி வீரர்கள் மீது சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

இந்த சீசனோடு ஆர்சிபி அணி கேப்டன் பதவியை துறக்க உள்ளதாக கோலி அறிவித்திருந்தார். அதனால் இந்த முறை கோப்பையோடு அவரை வழியனுப்ப வேண்டும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். ஆனால் நேற்று கொல்கத்தா அணியுடனான ப்ளே ஆப் போட்டியில் தோற்று ஆர்சிபி வெளியேறியது. இதனால் அந்த அணியின் மீதும் வீரர்கள் மீதும் சமுகவலைதளங்களில் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

இதுகுறித்து பேசியுள்ள அந்த அணியின் ஆல்ரவுண்டர் க்ளன் மேக்ஸ்வெல் ‘இது எங்களுக்கு சிறப்பான சீசன். எங்கள் ஆட்டத்தை யாரும் குறை சொல்லமுடியாது. சமூக ஊடகங்களில் எங்கள் மேல் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இது வெறுப்பைதான் ஏற்படுத்துகிறது. நாங்களும் மனிதர்கள்தான். எங்களின் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளோம். நாகரீகமாக நடந்துகொள்ளுங்கள். உண்மையான ரசிகர்களுக்கு நன்றி’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

120 சதவீத உழைப்பைக் கொடுத்திருக்கிறேன்… கடைசி வரை ஆர்சிபிதான் – கோலி நெகிழ்ச்சி!