Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பையில் இந்திய எடுத்த மோசமான முடிவு இதுதான் – கம்பீர் ஆவேசம் !

Webdunia
செவ்வாய், 14 ஜனவரி 2020 (09:05 IST)
இந்திய அணி உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் முகமது ஷமியை தேர்ந்தெடுக்காததுதான் மிக மோசமான முடிவு என கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் உலகக் கோப்பையில் இந்தியா செய்த மிக மோசமான தவறு என்ன என்பது குறித்துப் பேசியுள்ளார்.

’ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர்ஆஸ்திரேலியாவின் தலை சிறந்த வீரர்களான வார்னர் மற்றும் பிஞ்ச் ஆகியோருக்கு எப்படி வீசுவார்கள் என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன். இவர்கள் இருவரும் அடுத்தடுத்த ஓவர்களை வீசுவது நல்ல விஷயமாகும். ஷமியிடம்  நல்ல வேகம் உள்ளது அவரை உலக கோப்பை அரை இறுதியில் தேர்ந்தெடுக்காதது இந்தியா செய்த மிக மோசமான தவறாகும. நல்ல பார்மில் இருந்த அவரை உட்கார வைத்து தான் மிகப்பெரிய சிக்கல். இந்திய மைதானங்களில் ஷமி நன்றாக வீசக்குடியவர் அவர் இப்போது இருக்கும் பார்மில் இந்திய அணிக்கு கவலை இல்லை என்றே நான் கருதுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

மிடில் ஆர்டரை பலப்படுத்த நான் மூன்றாவதாக இறங்கினேன்… ஆனால்?- தொடக்க வீரர்களை நொந்த ருத்துராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments