Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் உத்திகள் என்னைத் திருப்திப்படுத்தியதே இல்லை… கௌதம் கம்பீர்!

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (16:22 IST)
கேப்டனாக கோலியின் உத்திகள் தன்னை ஒருபோதும் திருப்தி செய்தது இல்லை எனக் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

உலகக் கோப்பையில் தொடர்ந்து இரு தோல்விகளை சந்தித்துள்ள இந்திய அணி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ரசிகர்களிடம் மட்டும் இல்லாமல் முன்னாள் வீரர்களே விமர்சனங்களை வைக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் இந்திய அணியின் நியுசிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் திடீரென தொடக்க ஆட்ட ஜோடியை மாற்றியதும் இப்போது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள கௌதம் கம்பீர் ‘கேப்டனாக கோலியின் உத்திகள் என்றைக்கும் என்னைத் திருப்திப்படுத்தியதில்லை. இந்த முடிவுக்கும் தோனிக்கும் சம்மந்தம் இருக்காது. ஏனென்றால் அவர் இதுபோல திடீரென முடிவுகளை எடுக்கமாட்டார். மற்றவர்களும் கோலியின் முடிவுகளைக் கேள்வி கேட்க மாட்டார்கள். அதுதான் பிரச்சனை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments