Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கிங்ஸ்-ல் இருந்து தோனி விலக முடிவு?

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (16:07 IST)
சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி  அந்த அணியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த ஐபிஎல் 14 வது சீசனில் சென்னை கின்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது.

இதனால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து  கடந்த ஆண்டு ஓய்வு பெற்றாலும் தோனி இல்லாதது இந்திய அணிக்கு பெரும் இழப்பாகவே ரசிகர்கள் கருதினர். ஆனால் அவர் கடந்த முறை ஐபிஎல் போட்டியில் சோபிக்காததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அதற்குப் பதிலடியாக இம்முறை சென்னை அணி ஐபிஎல்-14 வது சீசன் கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் அடுத்தாண்டு ஐபிஎல்-15 வது சீசனில் தோனி சென்னை அணிக்கு விளையாடுவார அல்லது ஓய்வு பெறுவாரா என பலரும் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த சென்னை அணியின் தலைவர் சீனிவாசன், தோனி இல்லாமல் சென்னை அணி இல்லை எனத் தெரிவித்தார்.

இந்நிலையில்,  ஐபிஎல் 2022 ஆம் ஆண்டிற்காக ஏலம் நடைபெறவுள்ளதால் சென்னை கிங்ஸ் அணியில் இருந்து தோனி விலக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், தன்னைத் தக்க வைக்க ஏலத்தில் அதிக தொகையைச் செலவிட வேண்டாம் என தோனி சென்னை நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments