Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அணியில் இருந்து நீக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ்… பொங்கிய கவுதம் கம்பீர்!

அணியில் இருந்து நீக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ்… பொங்கிய கவுதம் கம்பீர்!
, புதன், 17 மார்ச் 2021 (12:06 IST)
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெறாதது குறித்து கவுதம் கம்பீர் காட்டமாகப் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி 20 தொடர் இப்போது நடந்து வருகிறது. இன்னும் 7 மாதத்தில் டி 20 உலகக்கோப்பை வர இருப்பதால் அணிக்கான வீரர்களை தயார் செய்யும் வேலை நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இடம்ப்டித்த சூர்யகுமார் யாதவ் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே களமிறக்கப்பட்டார். ஆனாலும் அவர் பேட்டிங் செய்யவில்லை.

இந்நிலையில் மூன்றாவது போட்டியில் அவர் நீக்கப்பட்டார். இது குறித்து பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ’அவர் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி கோலி பார்த்துவிட்டாரா? அவருக்கு 3 அல்லது 4 போட்டிகளிலாவது வாய்ப்புக் கொடுங்கள். யாரோ ஒரு வீரருக்குக் காயம் ஏற்படும் பட்சத்த்தில் அணியில் யாரை இறக்குவீர்கள்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சச்சினும் கோலியும் கிரிக்கெட்டின் மூலம் பணக்காரர்கள் ஆகிறார்கள்… கபில்தேவ் கருத்து!