Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஜாராதான் எனது சாய்ஸ் – கங்குலி அதிர்ச்சி பதில் !

Webdunia
சனி, 16 மார்ச் 2019 (14:03 IST)
இந்திய அணியில் நான்காவதாக இறங்க சரியான பேட்ஸ்மேன் புஜாராதான் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு இப்போது இருக்கும் மிகப்பெரிய தலைவலில் நான்காவதாக யாரை இறக்குவது என்பதுதான். யுவ்ராஜ் சிங் பார்ம் அவ்ட் ஆகி அணியில் இடம் இல்லாமல் ஒதுக்கப்பட்டதற்கு பிறகு அந்த நான்காவது இடத்திற்குப் பல பேட்ஸ்மேன்களை இந்தியாவின் பரிசோதனை செய்து பார்த்து விட்டது.

அம்பாத்தி ராயுடு, தோனி, ரிஷப் பண்ட் என எல்லோரையும் ஒத்திகைப் பார்த்தும் இன்னும் யார்மீதும் முழுமையான நம்பிக்கை வரவில்லை. இதனால் கோஹ்லியே அந்த இடத்தில் இறங்கலாம் எனவும் குரல்கள் எழுந்துள்ளன. உலகக்கோப்பைப் போட்டிகள் நெருங்கியுள்ள நிலையில் அந்த முடிவு எந்த அளவிற்கு சரியாக வரும் என்பது தெரியவில்லை.

இதுகுறித்து முன்னாள் வீரர்கள் பலரும் பலவிதமாக கருத்துகள் கூறிவரும் நிலையில் இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி இதுகுறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் ‘ நான் கூறப்போகும் பெயரைக் கேட்டு நீங்கள் என்னைப்பார்த்து சிரிக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் புஜாராதான் என் 4ம் நிலை வீரர். இதுவரை முயற்சி செய்தவர்களை விட புஜாரா ஒரு நல்ல பேட்ஸ்மென் தான் ஒருநாள் போட்டிகளில் ராகுல் திராவிட் ஆற்றிய ரோலை புஜாரா செய்ய முடியும்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments