Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிசிசிஐ பதவிகளில் கங்குலி, ஜெய்ஷா: சுப்ரீம் கோர்ட் அதிரடி அறிவிப்பு!

Ganguly
, புதன், 14 செப்டம்பர் 2022 (19:43 IST)
பிசிசிஐ தலைவர் பதவியில் சவுரவ் கங்குலியும் செயலாளர் பதவியில் ஜெய்ஷாவும் இருந்து வரும் நிலையில் அவர்களது பதவிக்காலம் முடிவடைய உள்ளது 
 
இந்த நிலையில் கங்குலி மற்றும் ஜெய்ஷா மீண்டும் ஒருமுறை தங்களது பதவிகளை தேர்வு செய்ய விதிகளை மாற்ற இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது 
 
பிசிசிஐ தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலி மற்றும் பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய்ஷா ஆகியோருக்கு பதவிக்காலம் நீடிப்பு குறித்ஹ்டு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது 
 
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கங்குலியும் செயலாளராக ஜெய்ஷாவும் இரண்டாவது முறையாக அந்த பதவியில் நீடிக்க ஒப்புதல் அளித்துள்ளது 
 
இதனை அடுத்து மேலும் மூன்று ஆண்டுகளுக்கு கங்குலி மற்றும் ஜெய்ஷா தங்கள் பதவியில் தொடர்வார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சிஎஸ்கே வீரர் ஓய்வு