Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ’மிதாலி ராஜ்’ டி -20 யில் இருந்து ஓய்வு ..

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (19:11 IST)
நம் இந்தியாவில் வேறெந்த விளையாட்டிற்கும் இல்லாத வகையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் அவர்களுக்கு பிடித்த வீரர்களை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாட தவறியதில்லை. இந்நிலையில் முன்னாள்  இந்திய பெண்கள் கிரிகெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் (36) டி -20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பெண்கள் இந்திய கிரிக்கெட்டில்  சச்சின் என மிதாலி ராஜ் அழைக்கப்படுகிறார்.அத்தகைய சாதனைகளையும் இவர் படைத்துள்ளார். 
 
கடந்த 1999 ஆம் ஆண்டு டி - 20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், இதுவரை 89 டி - 20 போட்டிகளில் விளையாடி மொத்தம்  2364 ரன்களை எடுத்துள்ளார். 
 
அதுமட்டுமின்றி டி -20 போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீராங்கணைகள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.இவரது சராசரி 37. 5 ஆகும். மிதாலியின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments