Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா விதிமுறைகளை மீறிய 5 இந்திய வீரர்கள் – இப்போது தனிமைப்படுத்துதலில்!

Webdunia
சனி, 2 ஜனவரி 2021 (17:53 IST)
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய வீரர்கள் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக கொரோனா விதிமுறைகளை மீறி உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் ஜனவரி 7ஆம் தேதி 3-வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியினர் 5 பேர் பயோ பபுளில் இருந்து வெளியேறி கொரோனா விதிமுறைகளை மீறியுள்ளனர்.

 துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, பிரித்வி ஷா, ரிஷப்பந்த், நவ்தீப் ஷைனி, சுப்மான் கில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஒரு ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த ரசிகர் ஒருவர் அவர்களிடம் கைகுலுக்கி செல்பி எடுத்துள்ளார். மேலும் வீரர்களின் உணவுக்கு தானே பணமும் செலுத்தியுள்ளார். இது சம்மந்தமாக அவர் சமூகவலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து அந்த ஐந்து வீரர்களும் இப்போது தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாராவின் 400 ரன்கள் சாதனையை நெருங்கிய தெ.ஆ. வீரர்.. திடீரென டிக்ளேர் செய்த கேப்டன்..!

டெல்லி பிரிமியர் லீக் ஏலம்.. சேவாக் மகன், விராத் கோஹ்லி உறவினருக்கு எவ்வளவு?

என் வாழ்க்கையின் சந்தோஷமான தருணமாக இந்த வெற்றி இருக்கும்- ஷுப்மன் கில் பூரிப்பு!

பிபிஎல்2 - தொடக்க ஆட்டத்தில் ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அசத்தல் வெற்றி

போர் படை ஆயிரம்.. இவன் பேர் இன்றி முடியாதே..! - ‘தல’ தோனியின் வாழ்க்கை வரலாறு!

அடுத்த கட்டுரையில்
Show comments