தோனியின் பண்ணையில் விளைந்த காய்கறிகள் ஏற்றுமதி !!

Webdunia
சனி, 2 ஜனவரி 2021 (17:30 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் உலகக் கோப்பை உள்ளிட்ட மூன்று கோப்பைகளைப் பெற்றுக் கொடுத்தவரும் பல இளைஞர்களுக்கு முன்னோடியாக உள்ளவர் தோனி.

இவர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். பின்னர் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றார். ஆனால் சென்னை அணி சூப்பர் லீக்கில் வெளியேறி விமர்சனங்களைச் சந்தித்தது.

இந்நிலையில், அடுத்த வருடம் ஐபிஎல் தொடரிலும்  தோனி சென்னை அணியில் கேப்டனாகப் பதவியேற்பார் என எதிர்பார்ப்புள்ளது.

சமீபத்தி  இந்திய அரசு இந்திய விசாயப் பொருட்கள் ஏற்றுமதிக்கு அனுமதியளித்துள்ள நிலையில், தோனி தனது பண்ணையில் விளைந்த காய்கள், பழங்கள் ஆகியவற்றை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துள்ளார்.

ஏற்கனவே ஜார்கண்ட் அரசு காய்கறிகளை ஐக்கிய அமீரகம் ( துபாய்)  நாட்டிற்கு ஏற்றுமதி பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன் கடந்த பத்தாண்டுகளில் ஐசிசியின் சிறந்த வீரர் மற்றும் சிறந்த ஒருநாள் வீரர் என்ற விருதுக்கு விராட் கோலியும், ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருதுக்கு தோனியும் ஐசிசியின் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து போட்டியில் மழை பெய்தால்? இறுதி போட்டிக்கு செல்லும் அணி எது?

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் எங்கள் ஹோம் கிரவுண்ட்.. கோப்பையை வெல்வோம்: தென்னாப்பிரிக்கா

சஞ்சு சாம்சனின் 97 ரன்களை விட ஷிவம் துபே அடித்த 2 பவுண்டரிகள் முக்கியமானது: கம்பீர்

திருவனந்தபுரத்தின் மகன் சஞ்சு சாம்சன்.. காங்கிரஸ் எம்பி பெருமிதம்..!

இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறாது என கூறிய பாகிஸ்தான் வீரர்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments