Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரில் கனமழை: இந்தியா-நியூசிலாந்து முதல் நாள் டெஸ்ட் போட்டி ரத்தா?

Siva
புதன், 16 அக்டோபர் 2024 (13:18 IST)
பெங்களூரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்க இருந்த நிலையில், அங்கு கன மழை பெய்து வருவதால் இன்னும் டாஸ் கூட போடவில்லை என்றும், இன்றைய போட்டி அனேகமாக ரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில், இன்று முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெற இருந்தது.

ஆனால் மழை காரணமாக இன்னும் டாஸ் போடப்படவில்லை என்றும், போட்டி தொடங்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மதியம் ஒரு மணிக்கு மைதானத்தை பார்வையிட்ட நடுவர்கள், மைதானத்தில் இன்னும் மழை நீர் தேங்கி இருப்பதாகவும், மழை பெய்து கொண்டிருப்பதாகவும், இப்போதைக்கு ஆட்டம் தொடர வாய்ப்பு இல்லை என்று கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.

எனவே இன்றைய முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.   இன்றைய போட்டியை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில், இன்னும் போட்டி தொடங்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments