இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தார். அவர் கூறியதாவது:
"இங்கிலாந்துக்கு முழு பாராட்டுக்கள். இந்தியா ஐந்து சதங்கள் அடித்திருந்தாலும், இங்கிலாந்துக்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. அதுதான் அவர்களை இறுதி விக்கெட்டுகளை எடுக்க செய்தது. அதனால் இந்தியா ரன்களை எடுக்க நேரிட்டது. கூடுதல் ரன்கள் வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கலாம். பீல்டிங்கை பொறுத்தவரை சாதாரணமாக இருந்தது. டெஸ்ட் தரத்தில் இல்லை
"பேட்டிங் செய்ய மிக சிறந்த பிட்ச் என்பதால், பந்துவீச்சாளர்களை விமர்சிப்பது மிகவும் கடினம். பும்ரா மிக நன்றாக பந்துவீசினார். அவருக்கு யாராவது, கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் பந்துவீசியிருந்தால், அது பெரிய உதவியாக இருந்திருக்கும். ஆனால் இது முதல் டெஸ்ட். நம்பிக்கையுடன், பாடங்கள் கற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். அடுத்த போட்டிக்கு இன்னும் எட்டு நாட்கள் உள்ளன."
நீங்கள் இந்தியாவுக்காக விளையாட இங்கு வந்திருக்கிறீர்கள். எனவே, நீங்கள் உங்களைச் சிறப்பாகச் தயார்படுத்தும் வகையில் பயிற்சி செய்யுங்கள் என்று சுனில் கவாஸ்கர் கூறினார்.