Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோனி தங்கியிருந்த ஹோட்டலில் தீ விபத்து: சக வீரர்கள் சிக்கி தவிப்பு!!

தோனி தங்கியிருந்த ஹோட்டலில் தீ விபத்து: சக வீரர்கள் சிக்கி தவிப்பு!!
, வெள்ளி, 17 மார்ச் 2017 (10:49 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது அணியினருடன் தங்கி இருந்த ஓட்டலில் திடீரென தீ பிடித்தது.


 
 
விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்து வருகிறது. இதன் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற இருந்தது. இந்த போட்டியில் மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் அணிகள் மோதுகின்றன. 
 
இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தலைமையிலான ஜார்கண்ட் அணியினர் துவாரகா ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
 
இந்த ஓட்டலில் இன்று காலை எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த வீரர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். 
 
இதனால், இன்று நடைபெறுவதாக இருந்த மேற்குவங்கம் - ஜார்கண்ட் இடையேயான அரையிறுதிப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

119 வருட சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்