Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்க்க மருத்துவமனையில் அனுமதிக்க திட்டமிடும் ரசிகர்கள்..!

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (16:23 IST)
அக்டோபர் 19ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளதை அடுத்து அந்த போட்டியை பார்ப்பதற்காக ரசிகர்கள் பலர் மைதானம் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.,
 
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முக்கிய போட்டிகளில் ஒன்றான இந்தியா பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 19ஆம் தேதி அகமதாபாத்  நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. 
 
இந்த போட்டிக்காக அக்டோபர் 18ஆம் தேதி விமான டிக்கெட் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி அகமதாபாத் நகரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் ரசிகர்கள் மைதானத்தின் அருகில் உள்ள மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைக்காக அக்டோபர் 18ஆம் தேதி புக் செய்து வருவதாகவும் அன்றைய தினம் புக் செய்து இரவு மருத்துவமனையில் தங்கி விட்டு மறுநாள் காலை மேட்ச் பார்க்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்தபோது வங்கதேச வீரருக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி..!

ஜோஃப்ரா ஆர்ச்சரை இனவாத ரீதியில் தாக்கிப் பேசினாரா ஹர்பஜன் சிங்?.. எழுந்த சர்ச்சை!

ருதுராஜ் கையில் இருந்த மர்ம பொருள்? பால் டேம்பரிங் செய்ததா CSK? - பரபரப்பு வீடியோ!

க்ளாஸை உடைச்சு பில்டப் பண்ணி வந்தது இதுக்குதானா? டக் அவுட் மூலம் ஹிட்மேன் செய்த புதிய சாதனை!

‘யாருப்பா நீ.. நல்லா பவுலிங் போட்ட’… தோனியே அழைத்துப் பாராட்டிய விக்னேஷ் புத்தூர்!

அடுத்த கட்டுரையில்
Show comments