Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சச்சினை தெரியாது என்று சொன்ன ஷரபோவாவிடம் மன்னிப்புக் கேட்ட ரசிகர்கள்!

Advertiesment
சச்சினை தெரியாது என்று சொன்ன ஷரபோவாவிடம் மன்னிப்புக் கேட்ட ரசிகர்கள்!
, வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (10:37 IST)
2015 ஆம் ஆண்டு சச்சினை தனக்கு தெரியாது எனக் கூறிய ஷரபோவா மீது ரசிகர்கள் கடுமையான விமர்சனத்தை வைத்தனர்.

2015 ஆம் ஆண்டு நடந்த விம்பிள்டன் போட்டியைக் காண சச்சின் டெண்டுல்கர் சென்றிருந்தார். அப்போது அவரிடம் சச்சின் பற்றிக் கேட்கப்பட்ட போது ‘அவரை எனக்கு தெரியாது’ எனக் கூறியிருந்தார். அப்போது கோபமான ரசிகர்கள் அவரை தரக்குறைவாக விமர்சனம் செய்து கண்டித்தனர்.

ஆனால் இப்போது சச்சின் விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராகப் பேசியுள்ள நிலையில் பலரும் சச்சினை விமர்சித்து வருகின்றனர். அதில் சிலர் மரியா ஷரபோவாவிடம் மன்னிப்பும் கேட்டுள்ளனர். அதில் சிலர் ’சச்சினை நீங்கள் தெரித்து வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அப்போது உங்களுக்கு எதிராகக் கருத்துகளைப் பதிவிட்டோம். இப்போது அதற்காக மன்னிப்புக் கேட்கிறோம். ’ என்றவாறு கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இங்கிலாந்துக்கு எதிரான தொடர்… விலகிய ஆல்ரவுண்டர்!