Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியர்களின் ஆங்கிலத்தை கேலி செய்தனரா மோர்கன் மற்றும் பட்லர்?

இந்தியர்களின் ஆங்கிலத்தை கேலி செய்தனரா மோர்கன் மற்றும் பட்லர்?
, புதன், 9 ஜூன் 2021 (13:03 IST)
சமீபத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஓலி ராபின்சன் நிறவெறி சர்ச்சையில் சிக்கி சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து தடை செய்யப்பட்டார்.

இதையடுத்து இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் மற்றும் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் இருவரும் இந்தியர்கள் பேசும் ஆங்கிலத்தை கேலி செய்யும் விதமாக டிவீட் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் அவர்கள் இருவர் மீதும் இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

அவர்களின் டிவீட்டில் பட்லர் “I always reply sir no1 else like me like you like me” என்று கூற அவருக்கு பதிலளித்த இயான் மோர்கன் “Sir, you play very good opening batting”  எனக் கூறியுள்ளார். இதில் இந்தியர்கள் பயன்படுத்தும் sir என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்தும் தவறான இலக்கணத்தோடு பேசும் ஆங்கிலத்தை கேலி செய்துள்ளனர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒலிம்பிக்கில் சீன விளையாட்டு உபகரணங்கள்; பயன்படுத்த மறுத்தது இந்தியா!