Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பும்ரா, ஷமி அபாரம்.. 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளிக்கும் இங்கிலாந்து..!

பும்ரா, ஷமி அபாரம்.. 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளிக்கும் இங்கிலாந்து..!
, ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (20:32 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்தியா கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி  முதலில் பந்துவீச முடிவு எடுத்த நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 87 ரன்கள் அடித்தாலும், கில், விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஏமாற்றினர்.

இதனை அடுத்து கேஎல் ராகுல், சூரியகுமார் யாதவ் ஆகியோர் ஓரளவு அடித்ததை எடுத்து இந்தியா 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 230 என்ற எளிய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடிய நிலையில் அந்த அணி பும்ரா மற்றும் ஷமியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது.  

ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக் ஆகியோர் டக் அவுட் ஆன நிலையில் பெயர்ஸ்டோ, டேவிட் மலான்,  கேப்டன் ஜாஸ் பட்லர், மொயின் அலி ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து விட்டனர்

இந்த நிலையில் இங்கிலாந்து அணி 23 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெறும் 81 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளதால் இந்தியாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

229 ரன்களில் சுருண்ட இந்தியா..! இங்கிலாந்தை மடக்கி சாதிக்குமா?