Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஷஸ் கடைசிப் போட்டி – முன்னிலையில் இங்கிலாந்து !

ஆஷஸ் கடைசிப் போட்டி – முன்னிலையில் இங்கிலாந்து !
, ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (08:14 IST)
ஆஷஸ் தொடரின் மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலைப் பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஆஷஸ் தொடர் இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. அதனால் கடைசிப் போட்டியில் எப்படியும் வெற்றிப் பெற்று தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து உள்ளது.

கடந்த 13 ஆம் தேதி கடைசிப் போட்டித் தொடங்கியது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி பட்லர் மற்றும் ஜோ ரூட்டின் அரைசதத்தால் 294 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். அதன் பின் தங்கள் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸியில் ஸ்டீவ் ஸ்மித்தைத் தவிர அனைவரும் ஏமாற்ற அந்த அணி 225 ரன்களுக்கு ஆல் அவ்ட் ஆனது. ஸ்டீவ் ஸ்மித் 80 ரன்களி சேர்த்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் அபாரமாக வீசி 6 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்நிலையில் 69 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஜோ டென்லி மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரின் சிறப்பான அரைசதத்தால் இங்கொலாந்து அணி 313 ரன்களை சேர்த்து 8 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 381 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முத்தரப்பு டி20 போட்டி: ஜிம்பாப்வேயை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்