Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வீரர்களுக்கு சிறப்பு அனுமதி கொடுத்த இங்கிலாந்து அரசு!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (11:40 IST)
இந்திய வீரர்கள் குடும்பத்துடன் இங்கிலாந்துக்கு வருவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான  5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஜூன் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. இந்த தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இங்கிலாந்துக்கு நாளை இந்திய வீரர்கள் தனி விமானம் மூலமாக செல்ல உள்ளனர். இங்கிலாந்தில் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் இருக்க வேண்டி இருப்பதால் தங்கள் குடும்பத்தினரை அழைத்து செல்ல அனுமதி கோரி விண்ணப்பித்தனர். அதற்கு பிசிசிஐயும் சம்மதித்துள்ளது. இந்நிலையில் அனைத்து வீரர்களும் நாளை குடும்பத்தினருடன் சவுத்தாம்ப்டனுக்கு சென்று அங்குள்ள ஓட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் வீரர்கள் குடும்பத்துடன் வந்து தங்குவதற்கு இங்கிலாந்து நாட்டு அரசு அனுமதி அளிக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் இப்போது அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. வீரர்களின் குடும்பத்தினர் பயோ பபுள் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments