7 விக்கெட்களை இழந்து தடுமாறும் இங்கிலாந்து… ஆஸி பவுலர்கள் ஆதிக்கம்!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (09:44 IST)
இன்று தொடங்கிய ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் திருநாளை ஒட்டி ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடத்தப்படும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த ஆண்டும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு முதல் பந்தில் இருந்தே அதிர்ச்சி காத்திருந்தது. ஆஸி அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அவுட் ஆகி பெவிலியன் திரும்பி வருகின்றனர். சற்று முன்பு வரை 122 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. ஆஸி அணியின் ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் ஆகிய மூவரும் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments