Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஸ்வரூபம் எடுத்த இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்திய மழை

Webdunia
சனி, 11 ஆகஸ்ட் 2018 (22:47 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி தற்போது லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 
 
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய இங்கிலாந்து அணி, இந்திய அணியை 107 ரன்களுக்குள் சுருட்டியது. அதன்பின்னர் நேற்றைய முதல் நாள் ஆட்டம் மழையால்  தடைப்பட்டதால் இன்று இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது.
 
இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை பதம் பார்த்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சற்றுமுன் வரை 6 விக்கெட்டுக்களை இழந்து 357 ரன்கள் குவித்துள்ளனர். பேர்ஸ்டோ 93 ரன்கள் எடுத்துள்ளார். வோக்ஸ் 120 ரன்கள் எடுத்து இன்னும் களத்தில் ஆடி வருகிறார்.
 
இந்த நிலையில் மழை காரணமாக போதுமான வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இங்கிலாந்து அணியினர்களின் விஸ்வரூப பேட்டிங்கை இந்திய பவுலர்கள் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் மழை கட்டுப்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் கமெண்டுக்கள் பதிவாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments