Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஸ்வரூபம் எடுத்த இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்திய மழை

Webdunia
சனி, 11 ஆகஸ்ட் 2018 (22:47 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி தற்போது லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 
 
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய இங்கிலாந்து அணி, இந்திய அணியை 107 ரன்களுக்குள் சுருட்டியது. அதன்பின்னர் நேற்றைய முதல் நாள் ஆட்டம் மழையால்  தடைப்பட்டதால் இன்று இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது.
 
இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை பதம் பார்த்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சற்றுமுன் வரை 6 விக்கெட்டுக்களை இழந்து 357 ரன்கள் குவித்துள்ளனர். பேர்ஸ்டோ 93 ரன்கள் எடுத்துள்ளார். வோக்ஸ் 120 ரன்கள் எடுத்து இன்னும் களத்தில் ஆடி வருகிறார்.
 
இந்த நிலையில் மழை காரணமாக போதுமான வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இங்கிலாந்து அணியினர்களின் விஸ்வரூப பேட்டிங்கை இந்திய பவுலர்கள் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் மழை கட்டுப்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் கமெண்டுக்கள் பதிவாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments