Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேப்பாக்கத்துக்கு கூடுதல் ரயில்கள் – தோனியா ? கோஹ்லியா ?

சேப்பாக்கத்துக்கு கூடுதல் ரயில்கள் – தோனியா ? கோஹ்லியா ?
, வெள்ளி, 22 மார்ச் 2019 (15:57 IST)
நாளை சென்னையில் முதல் ஐபிஎல் போட்டி தொடங்க இருப்பதால் சென்னை சேப்பாக்கத்துக்கு கூடுதல் ரயில்கள் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த ஆண்டு எப்ரல் முதல் மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடக்க இருப்பதால் பாதுகாப்புக் காரணங்களால் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதில் பிரச்சனைகள் ஏற்பட்டன. அதனால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தென் ஆப்பிரிக்கா அல்லது துபாயில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே இதுபோல 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகள் பாராளுமன்றத் தேர்தலின் போது வெளிநாடுகளில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டன.ஆனால் பிசிசிஐ இந்தியாவிலேயே ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என அறிவித்து இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அதையடுத்து 12 ஆவது ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 23 (நாளை ) ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கின்றன. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இதற்கான டிக்கெட் விற்பனை இப்போது நடந்து முடிந்துள்ளது. இதை அடுத்து பார்வையாளர்கள் வருகையை அடுத்த் சேப்பாக்கம் வழியாக செல்லும் மின்சார ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
webdunia

நாளை நடக்கும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோத இருப்பதால் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8000 பாரத் ஆர்மி ரசிகர்கள் – உலகக்கோப்பைக்காக இங்கிலாந்து பயணம் !