Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கிச் சுடுதலில் விருது வாங்கிய தமிழக வீராங்கனை..

Arun Prasath
திங்கள், 9 டிசம்பர் 2019 (13:13 IST)
துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சிறந்த வீராங்கனைக்கான கோல்டன் டார்கெட் விருதை பெற்றார் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன்

சீனாவில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ரைஃபிலில் இந்தியா சார்பாக பங்கேற்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன், 250.8 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்நிலையில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவு தரநிலையில் முதலிடம் பிடித்துள்ள இளவேனில் வாலறிவனுக்கு முனிச்சில் நடைபெற்ற விழாவில், சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு, கோல்டன் டார்கெட் விருதை அளித்துள்ளது.

முன்னதாக பிரேசிலில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments