Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை: டிராவிட் அதிரடி!!

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2017 (12:38 IST)
தோனி விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை அவரது முடிவுகளை அவரே தீர்மானிப்பார் என முன்னாள் இந்திய அணி கேப்டன் டிராவிட் தெரிவித்துள்ளார்.


 
 
இந்திய அணியின் வெற்றி கேப்டன் என அழைக்கப்படும் தோனியின் மீது தற்போது பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் தோனி கூலாகவே காணப்படுகிறார்.
 
முன்னர் தன் மீது எழுந்த விமர்சனங்கள் காரணமாகவே தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார். தனது கேப்டன் பதவியையும் துறந்தார். தற்போது கோலி தலைமையில் இந்திய அணி செயல்பட்டு வருகிறது.
 
இருப்பினும் தோனி விஷயத்தில் அணிக்குள் அரசியல் நடப்பதாகவே செய்திகள் வெளியாகின்றன. தற்போது, 2019 ஆம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனி பங்கேற்பாரா? அவர் தனது ஓய்வை எப்போது அறிவிப்பார் என விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. 
 
இந்நிலையில், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் டிராவிட் இது குறித்து கடுத்து தெரிவித்துள்ளார். டிராவிட் கூறியதாவது, தோனி குறித்து பலருக்கு பல கருத்துகள் உள்ளது. ஆனால் என்னை பொறுத்த வரையில் தேர்வுக்குழுவினர் அவரை தேர்வு செய்யும் வரை அவர் இந்திய அணிக்காக விளையாடும் தகுதி உள்ளவர்.
 
ஆனால் ஓய்வு குறித்த முடிவை எடுக்கும் தகுதி தோனி ஒருவருக்கு மட்டுமே உள்ளது. அவரை ஓய்வு பெற யாரும் கட்டாயப்படுத்த முடியாது. வேறு யாருக்கும் இது குறித்து விமர்சிக்க தகுதி இல்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments