Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அணியில் டிராவிட் செய்த மாற்றம்!

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (10:13 IST)
இந்திய அணி நேற்று இலங்கை அணிக்கெதிரான போட்டியில் 5 அறிமுக வீரர்களைக் களமிறங்க வைத்தது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நேற்று மூன்றாவது ஒரு நாள் போட்டியில் தோற்றாலும் தொடரை வென்றுள்ளது. ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணியில் நேற்று கிருஷ்ணப்பா கவுதம், நித்திஷ் ரானா, சேத்தன் சக்கர்யா, ராகுல் சாஹர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய 5 இளம் வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோல ஒரு போட்டியில் 5 வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். 40 வருடங்களுக்கு முன்னர் மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் திலிப் ஜோஷி, கிர்த்தி அஷாத், ரோஜர் பின்னி, சந்தீப் பட்டில் மற்றும் திருமலை ஸ்ரீனிவாசன் ஆகியோர் களமிறங்கினர். 40 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த தைரியமான முடிவை இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் எடுத்ததற்காக பாராட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments