Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அணியில் டிராவிட் செய்த மாற்றம்!

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (10:13 IST)
இந்திய அணி நேற்று இலங்கை அணிக்கெதிரான போட்டியில் 5 அறிமுக வீரர்களைக் களமிறங்க வைத்தது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நேற்று மூன்றாவது ஒரு நாள் போட்டியில் தோற்றாலும் தொடரை வென்றுள்ளது. ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணியில் நேற்று கிருஷ்ணப்பா கவுதம், நித்திஷ் ரானா, சேத்தன் சக்கர்யா, ராகுல் சாஹர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய 5 இளம் வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோல ஒரு போட்டியில் 5 வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். 40 வருடங்களுக்கு முன்னர் மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் திலிப் ஜோஷி, கிர்த்தி அஷாத், ரோஜர் பின்னி, சந்தீப் பட்டில் மற்றும் திருமலை ஸ்ரீனிவாசன் ஆகியோர் களமிறங்கினர். 40 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த தைரியமான முடிவை இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் எடுத்ததற்காக பாராட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments