Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனது தவறே தோல்விக்கு காரணம் - தினேஷ் கார்த்திக்

Webdunia
சனி, 26 மே 2018 (19:16 IST)
நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியின் தோல்விக்கு கேப்டன் தினேஷ் கார்த்திக் மிகவும் வருந்தியுள்ளார்.

 
ஐபிஎல் 2018 தொடரின் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் - கொல்கத்தா அணிகள் மோதியது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்து இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இதனால் நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோத உள்ளன.
 
இந்நிலையில் போட்டிக்கு பின் தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-
 
இந்த தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பாக ஆடினோம். ரன் இலக்கை தொடங்கும் போது எங்கள் பக்கமே ஆட்டம் இருந்தது. ஆனால் சில மோசமான ஷாட்களும், ஒரு ரன் அவுட்டும் எங்களிடம் இருந்து போட்டிடை மாற்றிவிட்டது.
 
நான், உத்தப்பா ஆகியோர் நன்றாக ஆடி ஆட்டத்தை சிறப்பாக முடித்திருக்க வேண்டும். ஆனால் எனது தவறின் மூலமே வெற்றியை நோக்கி செல்ல முடியவில்லை. கிறிஸ் லின் சிறப்பாக ஆடினார். இந்த தொடரில் இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

மகளிர் பிரிமியர் லீக்.. பெங்களூரு அணிக்கு 2வது வெற்றி.. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்..!

துபாயில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் விராட் கோலி… என்ன காரணம்?

கிரிக்கெட்டர்கள் PR குழு வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்று இப்போது புரிகிறது- ரஹானே ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments