Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரண்டாவது குவாலிஃபைரில் சுதாரித்த திண்டுக்கல்: இறுதி போட்டிக்கு தகுதி!

இரண்டாவது குவாலிஃபைரில் சுதாரித்த திண்டுக்கல்: இறுதி போட்டிக்கு தகுதி!
, செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (23:09 IST)
கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது கிளைமாக்ஸ் கட்டத்தை நெருங்கி உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் போட்டியில் சேப்பாக்கம் அணியிடம் தோல்வி அடைந்த திண்டுக்கல் அணி, இன்று மதுரை அணியுடன் இரண்டாவது குவாலிஃபையர் அணியுடன் மோதியது 
 
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. ஹரி நிஷாந்த் 51 ரன்களும் கேப்டன் ஜெகதீசன் 50 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து 176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மதுரை அணி 19.5 ஓவர்களில் 130 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மதுரை அணியின் கவுசிக் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து 40 ரன்களை எடுத்தார் 
 
இதனை அடுத்து திண்டுக்கல் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று சேப்பாக்கம் அணியுடன் மீண்டும் மோதவுள்ளது. இந்த இறுதி போட்டி வரும் 15ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அன்று இந்த ஆண்டு டி.என்.பி.எல் போட்டியின் சாம்பியன் யார்? என்பது தெரிந்துவிடும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிரிக்கெட் விளையாடதானே போனீங்க?? – ஷிகார் தவானின் சேட்டை வீடியோ