Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி தன் எல்லையை மீறமாட்டார்… எல் பாலாஜி நம்பிக்கை!

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (10:26 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி எந்த நேரத்திலும் தன்னுடைய எல்லையை மீற மாட்டார் எனக் கூறியுள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போது சூப்பர் 12 சுற்றில் இடம்பெறும் அணிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை வருகிற 24 ஆம் தேதி சந்திக்கிறது. இதனிடையே உலகக்கோப்பை டி20 தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு ஆலோசகராக செயலாற்றும்படி தோனியிடம் கேட்கப்பட்ட நிலையில் தோனி அதற்கு ஒத்துக் கொண்டுள்ளார். 

இந்நிலையில் தோனிக்கு கொடுத்துள்ள இந்த புதிய பொறுப்பால் சிறப்பாக சென்று கொண்டிருக்கும் ரவி சாஸ்திரி மற்றும் கோலி ஆகியோருக்கு தர்மசங்கடம் ஏற்பட்டு விடக்கூடாது என கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் லஷ்மிபதி பாலாஜி ‘தோனி இதே அணியோடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை விளையாடியுள்ளார். அதனால் அவருக்கு எதுவும் புதிதாக இருக்காது. அதுமட்டுமில்லாது தோனி எந்த நேரத்திலும் தன் எல்லையை மீறமாட்டார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அவரைப் போன்ற வீரர்களுக்குதான் அதிகம் ஆதரவு தரப்போகிறோம்.. கம்பீர் கருத்து!

நான் வியந்த மிகச்சிறந்த பேட்டிங் அபிஷேக் ஷர்மாவுடையதுதான்… ஜோஸ் பட்லர் ஆச்சர்யம்!

உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்திய அணியை டாஸின் போது கேலி செய்து ஊமைக்குத்து குத்திய ஜோஸ் பட்லர்!

என் வாழ்க்கையில் நான் அடித்த மொத்த சிக்ஸ்களை அபிஷேக் ஷர்மா ஒரே இன்னிங்ஸில் அடித்துவிட்டார்… பாராட்டிய முன்னாள் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments