Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி தன் எல்லையை மீறமாட்டார்… எல் பாலாஜி நம்பிக்கை!

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (10:26 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி எந்த நேரத்திலும் தன்னுடைய எல்லையை மீற மாட்டார் எனக் கூறியுள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போது சூப்பர் 12 சுற்றில் இடம்பெறும் அணிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை வருகிற 24 ஆம் தேதி சந்திக்கிறது. இதனிடையே உலகக்கோப்பை டி20 தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு ஆலோசகராக செயலாற்றும்படி தோனியிடம் கேட்கப்பட்ட நிலையில் தோனி அதற்கு ஒத்துக் கொண்டுள்ளார். 

இந்நிலையில் தோனிக்கு கொடுத்துள்ள இந்த புதிய பொறுப்பால் சிறப்பாக சென்று கொண்டிருக்கும் ரவி சாஸ்திரி மற்றும் கோலி ஆகியோருக்கு தர்மசங்கடம் ஏற்பட்டு விடக்கூடாது என கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் லஷ்மிபதி பாலாஜி ‘தோனி இதே அணியோடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை விளையாடியுள்ளார். அதனால் அவருக்கு எதுவும் புதிதாக இருக்காது. அதுமட்டுமில்லாது தோனி எந்த நேரத்திலும் தன் எல்லையை மீறமாட்டார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

லீக் போட்டிகளில் விளையாட தேசிய அணியைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்… லாரா வேதனை!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா?... துணைப் பயிற்சியாளர் அளித்த பதில்!

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments