Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோனி அடித்த அந்த புல்லட் ஷாட்; உயிர் தப்பிய ராகுல்

Advertiesment
இந்தியா
, வியாழன், 21 டிசம்பர் 2017 (15:46 IST)
இந்தியா - இலங்கை அணிகள் இடையே நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றிப்பெற்றது.

 
இந்திய - இலங்கை அணிகள் இடையே தற்போது 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. முதலில் பெட் செய்த இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.
 
இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 87 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. லோகேஷ் ராகுல் 61 ரன்கள் குவித்தார். அதிரடியாக விளையாடிய தோனி 39 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
 
தோனி அடித்த ஒரு ஷாட், ராகுல் மீது நேராக பாய்ந்தது. சுதாரித்துக்கொண்ட ராகுல் குதித்து தப்பினார். இதுகுறித்து ராகுல் கூறியதாவது:-
 
தொனி அடித்த பந்து என்னை நோக்கி வேகமாக வந்தது. கொஞ்சம் சிட்டு இருந்தால் என் உயிரே போய் இருக்கும். என்னை தோனி கிடத்தட்ட கொன்றேவிட்டார். எப்படியோ தப்பித்துவிட்டேன் என காமெடியாக கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் ஒருநாள் போட்டி: 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி