Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுனில் நரேன் பந்தில் ஒரு பவுண்டரி கூட அடிக்காத தோனி – இன்று சிஎஸ்கே vs கே கே ஆர்!

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (10:03 IST)
சென்னை அணியின் கேப்டன் தோனி கல்கத்தா வீரர் சுனில் நரேன் பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை என்பது இன்று வரை ஒரு சாதனையாக உள்ளது.

ஐபிஎல் தொடரில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கோப்பையை வென்ற அணிகளில் சென்னையும் கொல்கத்தாவும் உள்ளன. சென்னை 3 முறையும் கொல்கத்தா 2 முறையும் கோப்பையை வென்றுள்ளன. இன்று இவ்விரு அணிகளும் மோத உள்ளன.

இந்நிலையில் இந்த போட்டி பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சென்னை அணியின் பேட்டிங் தூணாக விளங்கும் தோனி கொல்கத்தா அணியின் சுழல்பந்து வீச்சாளர் சுனில் நரேன் பந்துவீச்சில் இதுவரை ஒரு முறை கூட பவுண்டரி அடித்ததில்லை. இதுவரை 59 பந்துகளை சந்தித்துள்ள அவர் வெறும் 29 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். ஒருமுறை அவர் பந்தில் அவுட் ஆகியுள்ளார். இன்றைய போட்டியிலாவது பவுண்டரி அடித்து இந்த மோசமான சாதனையை உடைப்பார் தோனி என ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

காட்டடி பேட்டிங் அனுகுமுறை இந்த தடவை வேலைக்காகல… அடுத்தடுத்து நான்கு தோல்விகளைப் பெற்ற SRH

தோனி இப்போது என்னுடன் அமர்ந்து கமெண்ட்ரி செய்துகொண்டிருக்க வேண்டும்.. நக்கலாக விமர்சித்த முன்னாள் வீரர்!

இனிமேல் சி எஸ் கே போட்டி பற்றி பேசமாட்டோம்… அஸ்வினின் யுட்யூப் சேனல் அறிவிப்பு!

இன்றைய போட்டியில் களமிறங்குகிறாரா பும்ரா… தோல்வியில் இருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments