Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியாவை திணறவிட்ட பாண்டியா, தோனி

Webdunia
ஞாயிறு, 17 செப்டம்பர் 2017 (18:28 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் குவித்தது.


 

 
ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட இந்தியா வந்துள்ளது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று சென்னையில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
 
ஆரம்பத்திலே தடுமாறிய இந்திய அணி 21.3 ஓவர் முடிவில் 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. கோலி, மனிஷ் பாண்டே ஆகியோர் ரன் எதுவும் குவிக்காமல் வெளியேறினர். ஜாதவ் 40 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார். இதையடுத்து ஒருபக்கம் நிதானமாக விளையாடிய தோனியுடன், பாண்டியா ஓடி சேர்ந்தார்.
 
இருவரும் சேர்ந்து மெல்ல அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஒரு கட்டத்துக்கு மேல் பாண்டியா ஆதிரடியாய் ஆட தொடங்கினார். 66 பந்துகளுக்கு 83 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார். இதையடுத்து புவனேஷ்குமார் தோனியுடன் சேர்ந்து ஆடினார்.
 
கடைசி கட்டத்தில் தோனி ரன் குவிப்பில் கவணம் செலுத்தினார். புவனேஷ்குமார் அவர் பங்குக்கு ரன்கள் குவிப்பு அதிரடியாய் இறங்கினார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் குவித்தது.
 
தோனி தனது 100வது அரை சதத்தை கடந்தார். தடுமாறிய இந்திய அணி 200 ரன்களை கடந்து 281 ரன்கள் குவிக்க உதவியது தோனி மற்றும் பாண்டியாவில் சிறப்பான ஆட்டம்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments