Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் முதல் இடத்தைப் பிடித்த டெல்லி அணி

Advertiesment
புரோ கபடி
, வியாழன், 26 செப்டம்பர் 2019 (23:28 IST)
புரோ கபடி போட்டித் தொடரின் ஆரம்பம் முதலே முதலிடத்தில் இருந்த டெல்லி அணி, நேற்று நடைபெற்ற போட்டி ஒன்றில் வெற்றி பெற்றதன் மூலம் பெங்கால் அணி முதல் முறையாக முதல் இடத்தை பிடித்தது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற பாட்னா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் அந்த அணி முதலிடத்தை பிடித்துள்ளது 
 
 
இன்று நடைபெற்ற பாட்னா மற்றும் டெல்லி அணிகளுக்கிடையிலான போட்டியில் டெல்லி அணி புள்ளிகளும், பாட்னா அணி 39 புள்ளிகளும் பெற்றதை அடுத்து, டெல்லி அணி 4 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
 
 
இதனையடுத்து டெல்லி அணி 77 புள்ளிகளுடன் முதலிடத்திலும் பெங்கால் அணி 73 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன. ஹரியானா, மும்பை, பெங்களூரு அணிகள் மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் டெல்லி மற்றும் பெங்கால் ஆகிய இரு அணிகளும் அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டது. இந்த  நிலையில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் இன்னும் இரண்டு அணிகள் எவை? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பண்ட்டை நீக்குவதற்கானக் காரணத்தை அவர் கொடுக்கக் கூடாது – கபில்தேவ் அறிவுரை !