Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை மன்னித்து விடுங்கள்… சி எஸ் கே வீரர் வெளியிட்ட கடிதம்!

Webdunia
சனி, 16 ஏப்ரல் 2022 (12:22 IST)
சி எஸ் கே வீரர் தீபக் சஹார் காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.

காயம் காரணமாக தீபக் சஹார் தொடர் முழுவதும் பங்கேற்க மாட்டார்  என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த சில நாட்களுக்கு முன்னர் முழங்கால் காயத்தை அடுத்து முதுகிலும் தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டதால் அவர் இந்த தொடரில் இருந்து விலகிவிட்டார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியில் அவர் 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது விளையாட முடியாமல் போனது குறித்து தீபக் சஹார் வெளியிட்டுள்ள அறிக்கையில்  “துரதிரிஷ்டவசமாக என்னால் இந்த சீசன் விளையாட முடியாமல் போய்விட்டது. நான் விளையாட விரும்பினேன் ஆனால் நான் கண்டிப்பாக வலுவாக திரும்பி வருவேன். நீங்கள் கொடுத்த ஆதரவுக்கும் அன்பிறகும் உத்வேகத்திற்கும் நன்றி. உங்களின் வாழ்த்துகள் வேண்டும். என்னை மன்னித்துவிடுங்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments