Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் போட்டி: இந்தியாவின் இரண்டாவது தங்கமங்கைக்கு குவியும் வாழ்த்துக்கள்

Webdunia
வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (08:38 IST)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் முதல் நாளான நேற்று  இந்தியாவின் மீராபாய் சானு முதல் தங்கப்பதக்கத்தை பெற்று தந்த நிலையில் இன்று இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம் கிடைத்துள்ளது.

இன்று நடைபெற்ற பளு தூக்குதல் 53 கிலோ எடை பிரிவில், இந்தியாவின்  சஞ்சிதா சானு தங்கம் வென்றார். தங்கம் வென்ற தங்க மங்கை சஞ்சிதாபானுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பிரபல கிரிக்கெட் வீரர் சேவாக் தனது டுவிட்டரில் இரண்டாவது தங்கம் பெற்று தந்த சஞ்சிதா சானுவுக்கு எனது பாராட்டுக்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்தியாவுக்கு இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி கிடைத்துள்ளதால் தற்போது பதக்கப்பட்டியலில் இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 4 தங்கம், 4 வெள்ளி பெற்ற ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 4 தங்கம், 3 வெள்ளி பெற்ற இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நிக்கோலஸ் பூரன் பேயாட்டம்… மும்பை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ!

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments