Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருசில நிமிடங்களில் விற்று தீர்ந்த ஐபிஎல் டிக்கெட் - ரசிகர்கள் அதிருப்தி

Mahendran
திங்கள், 18 மார்ச் 2024 (10:14 IST)
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணி மோத உள்ளது என்பதும் சென்னையில் நடைபெறும் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

 மேலும் இந்த முறை ஆன்லைனில் தான் முழுக்க முழுக்க டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று கூறியிருந்த நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர் என்பதும் கண்டிப்பாக அனைவருக்கும் டிக்கெட் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில் ஒரு சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டது. இதையடுத்து ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

இந்த போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் 1700 ரூபாய் என்றும் அதிகபட்சமாக 7500 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது என்பதும் ஆன்லைனில் வாங்கினாலும் ஒரு நபர் இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே வாங்க முடியும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments