Publish Date: Thu, 12 May 2022 (19:46 IST)
Updated Date: Thu, 12 May 2022 (19:49 IST)
இன்று நடைபெற்று வரும் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதல் ஓவரிலேயே கான்வே மற்றும் மொயின் அலி ஆகிய இரண்டு விக்கெட்டுகள் விழுந்தால் சென்னை ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
இதனை அடுத்து இரண்டாவது ஓவரில் ராபின் உத்தப்பா விக்கெட்டும் விழுந்தது. இதனால் சற்றுமுன் வரை சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 5 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்து வருகிறது
இன்றைய போட்டியில் சென்னை அணி வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்வதற்கு ஒரு சிறிய வாய்ப்பு இருக்கும் என்ற நிலையில் தற்போது சென்னை அணியின் ஆட்டம் படுமோசமாக உள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது