Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட்: சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு!

Webdunia
புதன், 17 மே 2023 (18:02 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் பிளே ஆப் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு டிக்கெட் வாங்குவதற்காக முந்தைய நாள் இரவிலிருந்து ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர் என்பதும் இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது என்பது. டிக்கெட்டுகளை ஏற்கனவே தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி வாங்கி அதிக விலைக்கு பிளாக்கில் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு இருந்தது 
 
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள இரண்டு பிளே ஆப் போட்டிகளுக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சென்னை சேப்பாக்கம் இரண்டு பிளே ஆப் போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments