Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி அடுத்த சீசனில் விளையாட மாட்டார்… முன்னாள் இந்திய வீரர் சொல்லும் காரணம்!

Webdunia
புதன், 17 மே 2023 (09:57 IST)
ஐபிஎல் போட்டிகள் வந்தாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் மட்டுமல்ல மற்ற அணி ரசிகர்களுமே தோனியின் சிக்ஸர்களை காண குவிந்து விடுவர். இந்திய அணி ஜாம்பவான் வீரரான தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருவதால் அப்படி ஒரு மவுசு.

தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனி இந்த சீசனோடு ஓய்வு பெற உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு சீசனிலும் அப்படி சொல்லப்பட்டாலும் கூட இதுவரை தோனி அவராக அவரது ஓய்வு குறித்து பேசவில்லை. ஆனால் இந்த ஐபிஎல்லில் ஆரம்பம் முதலே ஓய்வு பெறப் போவது போல சில இடங்களில் மறைமுகமாக அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் தோனியின் ஓய்வு பற்றி பேசியுள்ள முன்னாள் இந்திய அணி வீரர் முகமது கைஃப் “தோனி அடுத்த சீசனில் விளையாட மாட்டார் என்றே என்னுடைய உள்ளுணர்வு சொல்கிறது. அவர் தன்னுடைய ஓய்வு பற்றி போதுமான அளவுக்கு குறிப்புகளைக் கொடுத்துள்ளார். அவரின்  ஓய்வு பற்றி இப்போது உலகை யோசிக்க வைத்துள்ளார். அதுதான் அவரின் இயல்பு” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

அடுத்த கட்டுரையில்
Show comments