Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு: மீண்டும் சிஎஸ்கே!

வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு: மீண்டும் சிஎஸ்கே!

வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு: மீண்டும் சிஎஸ்கே!
, வெள்ளி, 14 ஜூலை 2017 (11:52 IST)
சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை சூப்புர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டிருந்த இரண்டு ஆண்டுகள் தடை நேற்றுடன் முடிந்ததையடுத்து அந்த அணி மீண்டும் ஐபிஎல்-இல் களம் இறங்க உள்ளது.


 
 
கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கௌரவ உறுப்பினர் என கூறப்படும் குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து இந்த இரண்டு அணிகளுக்கும் இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
 
குறிப்பாக சென்னை அணி இல்லாததால் கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களும் சுவாரஸ்யம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் சென்னை அணிக்கு விதிக்கப்பட்டிருந்த இரண்டு ஆண்டுகள் தடை நேற்றுடன் முடிந்தது. இதனால் சென்னை அணி மீண்டும் களம் இறங்க உள்ளது.
 
இந்த சந்தோஷத்தை அந்த அணி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளது. வந்துட்டோம்னு சொல்லு, திரும்ப வந்துட்டோம்னு சொல்லு... விசில் போடு என தெரிவித்துள்ளனர்.
 
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. மேலும் கலந்துகொண்ட அனைத்து ஐபிஎல் தொடரிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சகோதரி இல்லாத குறையை தீர்த்த வீனஸ் வில்லியம்ஸ்