Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரெய்னா மற்றும் ராயுடு இல்லாமல் குழம்பிய நிலையில் இருக்கிறோம் – ஒப்புக்கொண்ட சி எஸ் கே வீரர்!

ரெய்னா மற்றும் ராயுடு இல்லாமல் குழம்பிய நிலையில் இருக்கிறோம் – ஒப்புக்கொண்ட சி எஸ் கே வீரர்!
, சனி, 26 செப்டம்பர் 2020 (11:03 IST)
சி எஸ் கே அணியில் முக்கிய வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் அம்பாத்தி ராயுடு இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அந்த அணியின் வீரர் பாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற 8 ஆவது ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியிடம் சி எஸ்கே படுதோல்வி அடைந்தது. சி எஸ் கே அணி சிறப்பாக பந்துவீசி எளிதான இலக்காக 175 ஐ நியமித்தாலும், பேட்ஸ்மேன்களின் மந்தமான பேட்டிங்கால் படுதோல்வி அடைந்துள்ளது சி எஸ்கே.

இந்நிலையில் தோல்விக்குக் காரணம் குறித்து பேசியுள்ளார் அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேனான பாப் டு பிளெசிஸ். அவர் ‘இந்த 3 நாட்களில் நிறைய கற்றுக் கொண்டோம். டெல்லி அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. எங்கள் பேட்டிங்கில் தீவிரம் இல்லை. ஒவ்வொரு போட்டியும் வேறு பட்ட சூழ்நிலையில் ஆடினோம். எங்கள் பேட்டிங் வரிசையில் ரெய்னா மற்றும் அம்பாத்தி ராயுடு ஆகிய இரு பேட்ஸ்மேன்கள் இல்லாததால் குழம்பிய நிலையில் உள்ளோம்.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் 2020: சென்னை அணிக்கு அடுத்தடுத்த தோல்வி - ஏமாற்றிய தோனி