Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜடேஜா லண்டன் மருத்துவமனையில் அனுமதி: அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

ஜடேஜா லண்டன் மருத்துவமனையில் அனுமதி: அடுத்த போட்டியில் விளையாடுவாரா?
, ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (12:34 IST)
ஜடேஜா லண்டன் மருத்துவமனையில் அனுமதி: அடுத்த போட்டியில் விளையாடுவாரா?
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியின் போது ஜடேஜா பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்தின் தீவிரம் குறித்து அறிய நேற்று ஜடேஜா லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பெரிதான காயம் எதுவும் இல்லை என்றும் அவரும் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அறிவித்தனர்
 
இதனை அடுத்து லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவிருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜடேஜா தற்போது சிகிச்சை பெற்றுக்கொண்டு ஓய்வெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாரா ஒலிம்பிக் போட்டி: வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை