Webdunia - Bharat's app for daily news and videos

Install App

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

Siva
செவ்வாய், 15 ஜூலை 2025 (17:29 IST)
128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டியை இணைப்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளதால், கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
கடந்த 1900 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெற்றது. அப்போது பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அணிகள் என 2 அணிகள் மட்டுமே மோதி, அதில் பிரிட்டன் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
 
அதன் பின்னர் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெறாத நிலையில், தற்போது வரும் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2028 ஆம் ஆண்டு ஜூலை 12 முதல் ஜூலை 29 வரை இந்தப் போட்டிகள் நடைபெறும் என்றும், இதற்காக நகரின் மையத்திலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் ஒரு மைதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும். மொத்தம் 90 விளையாட்டு வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஒவ்வொரு அணியிலும் 15 வீரர்கள் இடம்பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இணைந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

22 ரன்கள் தான்.. ஜடேஜா கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருக்கலாம்.. முன்னாள் வீரர்கள் கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments