Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முகமது ஷமியை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முகமது ஷமியை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு
, செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (07:59 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அலிப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மேற்கிந்திய தீவுகள் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணியின் பவுலர்கள் ஒருவரான முகமது ஷமி மீது அவரது மனைவி சமீபத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். ஷமியும் மற்றும் அவரது சகோதரன் ஹசித் அகமது ஆகிய இருவர் மீது ஹசின் ஜகான் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 
 
இது தொடர்பாக முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி பலமுறை உத்தரவிட்ட போதும் இருவரும் ஆஜராகவில்லை. இதனையடுத்து முகமது ஷமி 15 நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் கைது செய்ய அலிப்பூர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் பயணம் மேற்கொண்டுள்ள ஷமி இந்தியா திரும்பியதும் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றிகரமான கேப்டன்: தோனியை முந்திய விராத்கோஹ்லி