Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒலிம்பிக் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் கொரோனா? – டோக்கியோவில் பரபரப்பு!

ஒலிம்பிக் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் கொரோனா? – டோக்கியோவில் பரபரப்பு!
, வியாழன், 15 ஜூலை 2021 (10:55 IST)
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் ஒலிம்பிக் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளன. கடந்த ஆண்டே நடத்தப்படவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால் இந்த மாதம் 23ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

உலக நாடுகளிலிருந்து பல ஆயிரம் வீரர்கள் இந்த போட்டிகளில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றைடைந்துள்ள நிலையில் அவர்கள் பரிசோதனைக்கு பிறகு கொரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள். இப்படியான சூழலில் பிரேசில் ஒலிம்பிக் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒலிம்பிக் கொரோனா பாதுகாப்பு வளையம் முறையாக பின்பற்றப்படுகிறதா என சில நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இங்கிலாந்து சென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா!