Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மெனக்கெட்டு கோல் அடித்த மெஸ்சி; ஈஸியார் சமன் செய்த சிலி! – ட்ரா ஆன முதல் ஆட்டம்!

Advertiesment
Football
, செவ்வாய், 15 ஜூன் 2021 (10:30 IST)
இன்று அதிகாலை நடைபெற்ற கோப்பா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா-சிலி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ட்ரா ஆனது.

லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே நடைபெறும் கோப்பா அமெரிக்கா போட்டிகள் நேற்று தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்திய நிலவரப்படி இன்று அதிகாலை நேரத்தில் முதல் மேட்ச்டேவின் மூன்றாவது ஆட்டத்தில் முதன்முறையாக அர்ஜெண்டினா-சிலி அணிகள் மோதிக் கொண்டன.

முதல் பாதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவின் ஆக்ரோஷமான ஆட்டத்தின் நடுவே ஃப்ரீ கிக் கிடைத்தது. அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மெஸ்சி 25 அடி தூரத்திலிருந்து ஃப்ரீ கிக்கை கோலாக மாற்றினார். தொடர்ந்து இரண்டாவது பாதி வரை கோல் அடிக்க போராடிய சிலி அணி ஒரு கோல் அடித்த நிலையில், அர்ஜெண்டினா இரண்டாவது கோலுக்கு முயன்றது. ஆனால் ஆட்டம் முடிவில் 1-1 என்ற கணக்கில் போட்டி ட்ரா ஆனது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா ஈசியா கப் அடிக்கும்… ஆஸி கேப்டன் கருத்து!