கோலியை நாய் என்று விமர்சித்த காங்கிரஸ் பிரமுகர் – தீபாவளி வீடியோவால் உருவான சர்ச்சை!

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (10:24 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தீபாவளிக்காக வெளியிட்ட வீடியோவில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள் எனக் கூறியதை அடுத்து அவர் மேல் விமர்சனம் எழுந்துள்ளது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளார். இந்நிலையில் தனது ரசிகர்களுக்காக அவர் வெளியிட்ட வீடியோவில் ’தீபாவளி பண்டிகையை ஒட்டி யாரும் பட்டாசு வெடிக்காதீர்கள். சுற்றுசூழலைக் காக்கும் விதமாக தீபங்களை ஏற்றியும் இனிப்புகளை பரிமாறியும் கொண்டாடுங்கள்’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவரின் வீடியோ பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் எல்லா போட்டிகளிலும் பட்டாசுகள் அதிகமாக வெடிக்கப்பட்டன. அதுமட்டுமில்லாமல் கோலி தனது பிறந்தநாளை துபாயில் கொண்டாடிய போது பட்டாசு வெடித்துதான் கொண்டாடினார். அப்படி இருக்கையில் அவர் எப்படி மக்களிடம் பட்டாசு வெடிக்க வேண்டாம் என சொல்லலாம் என விமர்சனம் எழுந்தது.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளருமான் உதித் ராஜ் இதுகுறித்து பேசும் போது விராட் கோலியை நாய் என விமர்சனம் செய்துள்ளார். இது இப்போது பரபரப்பை உருவாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

அடுத்த கட்டுரையில்
Show comments