Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ.பி.எல். தொடரில் திடீரென விலகிய கெயில்: காரணம் இதுதான்!

ஐ.பி.எல். தொடரில் திடீரென விலகிய கெயில்: காரணம் இதுதான்!
, வெள்ளி, 1 அக்டோபர் 2021 (08:00 IST)
பஞ்சாப் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான கிறிஸ் கெய்ல் திடீரென அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பஞ்சாப் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் முக்கிய வீரரான கிறிஸ் கெயில் அதிரடியாகப் விளையாடி தனது அணிக்கு வெற்றியை தேடிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் திடீரென பஞ்சாப் அணியில் இருந்து விலகுவதாக கிறிஸ் கெய்ல் அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அடுத்த மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் விதமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் அறிவித்துள்ளார் 
 
தற்போதைய நிலையில் பஞ்சாப் அணி 4 வெற்றிகளை பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல்-2021; சென்னை கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி