140 ரன்கள் இலக்கை அடைய திணறி வரும் சென்னை

Webdunia
செவ்வாய், 22 மே 2018 (21:18 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் போட்டிகள் முடிவடைந்து இன்று முதல் பிளே ஆஃப் சுற்று ஆரம்பமாகியுள்ளது. இன்றைய போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஐதராபாத் மற்றும் சென்னை அணிகள் மோதி வருகின்றன
 
டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய ஐதராபாத் பேட்டிங் செய்தது. இந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 139 ரன்கள் எடுத்துள்ளது. பிராத்வெயிட் 43 ரன்களும், வில்லியம்சன், யூசுப்பதான் தலா 24 ரன்கள் எடுத்தனர்.
 
இந்த நிலையில் 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடி வருகிறது. ஆனால் ஐதராபாத் அணியின் அபார பந்துவீச்சால் சென்னை அணி 24 ரன்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகின்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்று நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும் அணி எது? என்பது இன்னும் சில நிமிடங்களில் தெரிந்துவிடும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments