Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்சன் அதிரடி சதம்: 3வது முறையாக சிஎஸ்கே சாம்பியன்

Webdunia
ஞாயிறு, 27 மே 2018 (22:47 IST)
2018ஆம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ளது. இந்த போட்டியில் ஷேன் வாட்ஸன் அதிரடியாக 117 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தால்
 
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி. இதனால் முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 178 ரன்கள் எடுத்தது. கேப்டன் வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் எடுத்தானர். 
 
இந்த நிலையில் வெற்றி பெற 179 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 181 ரன்கள் குவித்தது. ஷேன் வாட்சன் மிக அபாரமாக விளையாடி 57 பந்துகளில் 117 ரன்கள் எடுத்தார். இதில் 8 சிக்ஸர்களும், 11 பவுண்டரிகளும், அடங்கும். மேலும் சுரேஷ் ரைனா 32 ரன்கள் எடுத்தார். 
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments