Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் ஜன்னலோர இருக்கை – நெகிழ்ந்த சஹால் !

Webdunia
செவ்வாய், 28 ஜனவரி 2020 (16:29 IST)
பேருந்தில் செல்லும் போது தோனிக்காக ஒதுக்கப்படும் இருக்கையில் யாரும் அமர்வதில்லை என சுழற்பந்து வீச்சாளர் சஹால் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் சஹால் தனது மொபைல் போனில் சக வீரர்களை நேர்காணல் செய்து அதை தனது டிவிட்டரில் பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டு வருபவர். அதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

தற்போது நியுசிலாந்தில் இருக்கும் இந்திய அணி மூன்றாவது போட்டிக்கக ஹாமில்டன் மைதானத்துக்கு பேருந்தில் சென்றபோது இந்தியாவின் சஹால், ஒவ்வொரு வீரரிடமும் கேள்விகளை எழுப்பினார். அப்போது பேருந்தின் கடைசி இருக்கைக்கு சென்ற அவர் உணர்ச்சிகரமாக ‘பேருந்தின் கடைசி சீட்டில் இருக்கும் ஜன்னலோர இருக்கை எப்போதும் லெஜண்ட் ஒருவருக்காக ஒதுக்கப்படும். அவருக்காக சீட்டில் இப்போதும் யாரும் உட்காருவதில்லை. அணியில் உள்ள அனைவரும் தோனியை மிஸ் செய்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments